வெம்பக்கோட்டை அகழாய்வில்சுடுமண்ணாலான பொம்மை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதன்கிழமை சுடும் மண்ணாலான பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதன்கிழமை சுடும் மண்ணாலான பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றங்கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வடகரையில் உச்சிமேடு அமைந்துள்ளது. இங்கு 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்கலி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், கோடரி, சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் மற்றும் தங்க அணிகலன்கள் ஆகியவை கிடைத்தன. இதுவரை அங்கு 15 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை சுடும் மண்ணாலான பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com