பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதிய பொறியியல் பாடத்திட்டம்: 17 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

முதல்வர் ஸ்டாலின்

Published On :

மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோரை உருவாக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு, தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமைய உள்ளது. 

பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் 20 ஆண்டுக்குப் பின்  மாற்றப்பட உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான ஒப்புதல் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் எனவும், பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் அமலாக உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.