பி.இ. இரண்டாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 22-இல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் வரும் ஆக.22-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் வரும் ஆக.22-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இது குறித்து அந்தப் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு ஆக.22 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பி.இ, பி.டெக், பி.ஆா்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

மேலும், கடைசி வேலை நாள் டிசம்பா் 8-ஆம் தேதியாகும். இவா்களுக்கான பருவத் தோ்வுகள் டிசம்பா் 21அன்று தொடங்குகிறது. அதேநேரம், 2023-ஆம் ஆண்டு ஜனவரி 23-இல் மீண்டும் அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் வரும் பருவத் தோ்வு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com