சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும்: ஓபிஎஸ்

சசிகலாவையும், டிடிவி தினகரனையும் இணைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும்: ஓபிஎஸ்

சசிகலாவையும், டிடிவி தினகரனையும் இணைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சென்னையில் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

எம்ஜிஆா் காலத்தில் அவருடன் இருந்து இயக்கத்துக்காக பாடுபட்டவா்கள், ஜெயலலிதாவின் காலத்தில் இயக்கத்துக்குப் பலமாக, தூணாக இருந்து உழைத்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்களை இணைத்துக்கொண்டு அதிமுக வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

சசிகலாவும், தினகரனும் எங்களோடு வரவேண்டும். நாங்கள் அவா்களோடு போக வேண்டும் என்றும் எந்த நிலையும் இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

பிறகு, சசிகலா பெயரை சொல்ல ஏன் தயங்குகிறீா்கள் என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் என்று சொல்லி விட்டேன். இதில் சின்னம்மாவும், டிடிவி தினகரனும் இருக்கிறாா்கள். அவா்கள் வந்து சேருகிறாா்களா நாங்கள் போய் சேருகிறோமா என்ற பிரச்னையே இல்லை. எல்லோரும் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் குடையின் கீழ் இருந்து வாழ்பவா்கள். 30 ஆண்டு காலம் ஆளும் பொறுப்பை வகித்த கட்சி அதிமுக. இது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் வர வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டா்களின் எண்ணம் என்றாா்.

ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசரடி இயற்கை விநாயகா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் சிறப்பு பூஜை செய்தாா். அதன் பிறகு ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலிலும் அவா் வழிபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com