தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக தில்லி புறப்பட்டு சென்றார்.
தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இந்த வார இறுதியில் அவர் சென்னை திரும்பலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க- ஆளுநர் அடம்பிடித்து நாடகம் ஆடுகிறார்: கே. பாலகிருஷ்ணன்
துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்கிற மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.