‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற தலைப்பிலான ஒளி-ஒலிக் காட்சி வடிவம், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் விடுதலைப் போரில் வீரத் தமிழகம் என்ற முப்பரிமாண ஒலி-ஒளிக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.
முப்பரிமாண காட்சி ஆக.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.