பாரத் அதிவேக ரயில் சாதனைக்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக அந்தக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக ரயில் 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீா்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிா்வாகத்துக்கு வாழ்த்துகள். இந்தியாவில் உற்பத்தி செய்யும் முயற்சிகள் தொடரட்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.