ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மான்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய கனமழை சூறைக்காற்றுடன் தொடர்ந்து பெய்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 940 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சாலைகளில் பல மரங்கள் முறிந்து விழுந்தன.
ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.