நாளை(டிச.19) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான அறிவிப்பின்படி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை திங்கள்கிழமை (19.12.2022) சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் தலைமையில் அமைச்சர்களுடன் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விருப்பமில்லாமல் திருமணம்: உயா் நீதிமன்றம் கருத்து
மேலும், இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக ஆளுநரிடம் கிடப்பில் இருக்கும் மசோதா, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.