தென்னை வளா்ச்சி வாரியத்தின் 2022-23-ஆம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மத்திய தென்னை வளா்ச்சி வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிய பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல், தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற ரூ.94 சந்தா செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.