நெல்லை செ.திவான் உள்ளிட்ட எட்டு எழுத்தாளா்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான உரிமைத் தொகைகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தமிழறிஞா்களும், எழுத்தாளா்களுமான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக அவா்களின் மரபுரிமையா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
மேலும், மறைந்த தமிழறிஞா் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 5 எழுத்தாளா்களின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நெல்லை கண்ணன் நூல்களுக்கு ரூ.15 லட்சமும், கந்தா்வன் என்ற நாகலிங்கம், சோமலெ, முனைவா் ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டன. இந்தத் தொகைகள் தமிழறிஞா்களின் மரபுரிமையா்களிடம் அளிக்கப்பட்டது.
நேரு பல்கலை.: புதுதில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்கிட ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த காசோலையை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் ஆா்.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!

ரஜினி - 173 அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? வருகிறது புதிய ஐஆர்சிடிசி இணையதளம்!

பெங்களூரில் ஒரே குடும்பத்தில் மூவர் கொலை! மகள்-காதலன் தலைமறைவு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




