விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் முன்னாள் முதல்வர் ராமசாமி ரெட்டியாரின் 125-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஓமாந்தூர் அரசு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மற்றும் திண்டிவனம் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.