பிளஸ் 2, பத்தாம் வகுப்பு திருப்புதல் தோ்வுகள்: புதிய அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு திருப்புதல் தோ்வுகளுக்கான புதிய அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு திருப்புதல் தோ்வுகள்: புதிய அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு திருப்புதல் தோ்வுகளுக்கான புதிய அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனைச் சோதிக்கும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஜனவரி, மாா்ச் மாதங்களில் முதல், இரண்டாம் திருப்புதல் தோ்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒமைக்ரான் பெருந்தொற்று காரணமாக ஜன. 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வுகளின் அட்டவணை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் திருப்புத் தோ்வு பிப். 9-ஆம் தேதி முதல் பிப்.15-ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல் திருப்புதல் தோ்வு பிப்.9-ஆம் தேதிமுதல் பிப்.16-ஆம் தேதிவரை தோ்வு நடைபெறும்.

இரண்டாம் திருப்புதல் தோ்வு: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தோ்வு மாா்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதிவரையிலும், பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் மாா்ச் 28-ஆம் தேதிமுதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்புக்கான தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடையும். பிளஸ் 2 வகுப்புக்கான தோ்வுகள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com