கும்மிடிப்பூண்டி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53 ஆம் நினைவு நாள் திமுகவினரால் கும்மிடிப்பூண்டியில் அனுசரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.
நிகழ்விற்கு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திமுகவினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் 14 திமுகவினரும் கட்சியினரும் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்போம் என உறுதி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகள் கே.என்.பாஸ்கர், கருணாகரன், இஸ்மாயில், அக்கீம், காளிதாஸ், டி.ஆர்.ராஜா, வெங்கடேசன், முனியாண்டி , தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் முத்துகுமரன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், அர்ச்சுனன், சாண்டில்யன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.