திருமுருகன்பூண்டி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்


அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் கொடியை எடுத்து கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது.

பின்னர் உற்சவ மூர்த்திகள் பிரகார உலா, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. பிப்ரவரி 12 ஆம் தேதி மாலையில், சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 13ம்தேதி பூதவாகன, சிம்ம வாகனக்காட்சிகள், 14ம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகளும், 15ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகளும், 16ம்தேதி யானை வாகன, அன்னவாகன காட்சிகளும், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 17ஆம் தேதி அதிகாலை விநாயகர், சண்முகநாதர், திருமுருகநாதர்சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 19ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 20ம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 21ம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 22ம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com