தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வெளியிட்டாா். தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக அவா் பணியாற்றி வந்தாா்.
தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ, விருப்ப ஓய்வு பெற அனுமதி கோரியிருந்தாா். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றிய உறைவிட ஆணையா் பொறுப்பு காலியாக இருந்தது. இந்தப் பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.