தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 31,368 போ் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,325-ஆக குறைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 303 பேரும், கோவையில் 231 பேரும், செங்கல்பட்டில் 113 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் மேலும் 5,894 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 லட்சத்து 69,907-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,946-ஆக அதிகரித்துள்ளது.