கோவை மாநகராட்சியில் 38 ஆவது வார்டில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கோவை மாநகராட்சியில் 38 ஆவது வார்டில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட அமிர்தவல்லி 250 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளா வெற்றி பெற்றார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.