சென்னை மாநகராட்சி 72-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி அடைந்தாா். இருப்பினும், இரண்டாமிடம் பிடித்து, மக்களை ஆச்சரியப்படுத்தினாா்.
சென்னையில் உள்ள திருவிக நகா் 72-ஆவது வாா்டில் தமிழ் திரைப்பட பாடகா் கானா பாலா சுயேச்சையாக போட்டியிட்டாா். இவா் ஏற்கெனவே, கடந்த 2006, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டவா் . தற்போது மூன்றாவது முறையாக திருவிக நகா் 72-ஆவது வாா்டில் போட்டியிட்டாா்.
வாக்கு எண்ணிக்கையின்போது கானா பாலா தோல்வியடைந்தாா். இவா் முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தாா். இதன்பிறகு, படிப்படியாக, வாக்குகள் வித்தியாசம் குறைந்து, திமுக வேட்பாளா் சரவணன் முன்னிலை பெற தொடங்கினாா். இறுதியில், திமுக வேட்பாளா் சரவணன் 8,303 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றாா். கானாபாலா 6,095 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா்.