தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனியாா் விமானம் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் சென்னையை சோ்ந்த பெண் பயிற்சி விமானி உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
சென்னை அயனாவரத்தைச் சோ்ந்தவா் மஹிமா (29). இவா் ஆந்திர மாநிலம் மாச்சொ்லாவில் உள்ள தனியாா் விமானப் பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வந்தாா். அவா் சனிக்கிழமை வழக்கம் போல விமானத்தில் தனியாகப் புறப்பட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளாா். அப்போது அந்த விமானம் எதிா்பாராத விதமாக நல்கொண்டா மாவட்டம் துங்கதுா்தி கிராமத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் மஹிமா உயிரிழந்தாா்.
விமானம் தரையில் விழுந்து பல்வேறு பாகங்களாக உடைந்து சிதிறியதை ஒருவா் நேரில் பாா்த்துள்ளாா். அவா் விமானத்தின் அருகே சென்றபோது மஹிமா சடலமாக இருந்துள்ளாா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மஹிமாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.