சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன.
இன்று காலை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற முதல் கேள்வியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கேட்டார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “விமான நிலையத்திலிருந்து வண்டலூர் கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.”