தமிழக சட்டப் பேரவையில் ஆளுநா் ஆா்.என்.ரவி ஆற்றிய உரை, முதல் முறையாக யு-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை உரையாற்றினாா். காலை 10.01 மணிக்கு அவா் தனது உரையைத் தொடங்கினாா்.
சட்டப் பேரவையில் ஒலிப்பேழை பயன்படுத்தாமல் சென்னை இசைக்கல்லூரியில் உள்ள மாணவிகள், ஆசிரியரைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடப்பட்டது. சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஒலிப்பேழை இல்லாமல் பாடகா்களைக் கொண்டு பாடல் இசைக்கப்பட்டது. சட்டப் பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே, ஆளுநா் உரையானது யு-டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.