தேனியில் பொங்கல் அன்று சேவல் சண்டை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியது.
கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டு வருகிற நிலையில் தேனி உத்தமபாளையத்தில் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஜனவரி 17 அன்று நடைபெறும் சேவல் சண்டையில் சேவல்களின் கால்களில் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கட்டக்கூடாது என்றும் சேவல்கள் உயிரிழக்காத வகையில் சண்டை நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி சுவாமிநாதன் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கினார்.