அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஜனவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஜனவரி 19-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.