எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மெளலானா, அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com