கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே, பொங்கலுக்கு முன்பாகவே அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூத்த மகன் என இரண்டு பேருக்கும் கரோனா உறுதியானபோது எம்எல்ஏவுக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. அன்றிலிருந்தே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்று எம்எல்ஏவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.