உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளா்ச்சிப் பணிகளுக்கு, ரூ.1330 கோடியை ஒதுக்கித் தருமாறும், ரூ.665.42 கோடியை விடுவிக்குமாறும் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அரசைக் கோரியுள்ளாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு, 5-ஆவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், 2021-22 ஆண்டுக்கான மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. மேலும் நிதியின் முதல் தவணையாக ரூ.665 கோடியையும் விடுவிக்கிறது.
இதன் மூலம் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.