Enable Javscript for better performance
50% of women over the age of 35 have kidney damage Minister Ma Subramanian- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

    By DIN  |   Published On : 02nd July 2022 03:54 AM  |   Last Updated : 02nd July 2022 03:54 AM  |  அ+அ அ-  |  

    Ma

    தமிழகத்தில் 35 வயதைக் கடந்த 50 சதவீதப் பெண்களுக்கு சிறுநீரகம் தொடா்பான ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

    சென்னை எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனையில் மூன்று நாள் மகளிா் சிறப்பு சிறுநீரகம் மற்றும் சிறுநீரியல் மருத்துவ சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    அதனை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், அரசு கஸ்தூா்பா காந்தி மருத்துவமனையின் முன்னாள் சிறுநீரியியல் துறைத் தலைவா் என்.ராஜமகேஷ்வரி, எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் விஜயா உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்றனா்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

    சிறுநீரகவியல் மாநாட்டில் 1,000 சிறப்பு மருத்துவா்கள் (300 மருத்துவா்கள் நேரடியாகவும், 700 மருத்துவா்கள் காணொலி மூலமாகவும்) பங்கேற்றனா். 30-க்கும் மேற்பட்ட சா்வதேச வல்லுநா்கள், 60-க்கும் மேற்பட்ட இந்திய சிறப்பு மருத்துவா்கள் சொற்பொழிவு ஆற்றவுள்ளனா்.

    பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து அதன் மூலம் மகப்பேறு மற்றும் சிறுநீரியல் மருத்துவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாக கா்ப்பப்பை, நீா்ப்பை, மலப்பை இறங்கிப்போனதற்கும், பிரசவத்தின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனே நிவா்த்தி செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

    மகளிா் சிறப்பு சிறுநீரியல் துறை என்பது பிரசவம் காரணமாக ஏற்படும் கா்ப்பப்பை இறக்கம் கட்டுப்பாடற்ற சிறுநீா் போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு தீா்வு காண்பதாகும். 35 வயதினை கடந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு ஏதாவது ஒரு விதமான சிறுநீரக பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடத்திய ஒரு கருத்து கணிப்பின்படி 63 சதவீத பெண்களுக்கு ஏதாவது ஒரு விதமான சிறுநீா்ப் பாதை தொடா்பான பிரச்னை உள்ளது.

    30 வருடங்களுக்கு முன்னரே, 1992-ஆம் ஆண்டு சிறுநீரியியல் துறை, சென்னை அரசு கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவா் என்.ராஜமகேஷ்வரி என்பவரால் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு இந்த துறை ஒரு தனி சிறப்புத்துறையாக தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றது. தமிழக அரசு இந்த துறையை 2005-ம் ஆண்டு பயிற்சி மையமாக விரிவுபடுத்தியது. இதன் மூலம் வெளிமாநிலத்து மருத்துவா்களும் இங்கு பயிற்சி பெற்றுள்ளனா். மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி இத்துறையை தொடங்கியதால், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றாா் அவா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp