5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, திருப்பூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, திருப்பூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டமான வானிலை காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத் தகவல்படி, வியாழக்கிழமை நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக் கல்லாறு மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 9 செ.மீ., சோலையாறு, மேல் பவானி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 7 செ.மீ., சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com