சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை தேவை என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு மீண்டும் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிரந்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.