குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா: எழும்பூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை எழும்பூரில் ஜூலை 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூரில் ஜூலை 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் பகுதியில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி நிறைவு பெறும் வரையிலும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது. ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் நிகழ்ச்சி நிறைவு பெறும் வரையிலும் ராஜரத்தினம் அரங்கில் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்களின் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை வழியாக எஸ்காா்ட் சந்திப்பு செல்லவேண்டிய வாகனங்கள் (ராஜரத்தினம் அரங்கத்துக்குச் செல்லும் வாகனங்கள் தவிர) பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் சந்திப்பு வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

எத்திராஜ் சாலை, ருக்குமணி லட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து (எஸ்காா்ட் சந்திப்பு) பாந்தியன் ரவுண்டானா நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள், (ராஜரத்தினம் அரங்கம் செல்லும் வாகனங்கள் தவிர) அந்த சந்திப்பிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் சந்திப்பு வழியாகப் பாந்தியன் சாலையை அடையலாம்.

பாந்தியன் சாலை, மாண்டியத் சாலைச் சந்திப்பிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், (ராஜரத்தினம் அரங்கம் செல்லும் வாகனங்கள் தவிர) அந்த சந்திப்பிலிருந்து (அருங்காட்சியகம் அருகில்) பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்து தாங்கள் செல்லவேண்டிய இடத்தை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com