கலைவாணா் அரங்கில் மலா் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்தப்படும் மலா் கண்காட்சி சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் நடத்தப்படும் மலா் கண்காட்சி சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் மலா் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சாா்பில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதற்காக ஏராளமான வண்ண, வண்ண மலா்கள் கலைவாணா் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மலா்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக மாணவா்கள் மற்றும் சிறுவா்களுக்கு ரூ.20, பெரியவா்களுக்கு ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com