ஆவடி, திருமுல்லைவாயலில் ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் திறந்து வைத்தாா்.
ஆவடி மாநகராட்சி, 9-ஆவது வாா்டுக்குட்பட்ட திருமுல்லைவாயல், வடக்கு முல்லை நகரில் சிறுவா் பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டது. முறையாகப் பராமரிக்காததால், பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள், நடைபாதை சேதமடைந்தன.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அமைச்சா் சா.மு.நாசரிடம் பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சமீபத்தில் அவா் பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி, பூங்காவைச் சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு, பூங்காவில் நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் புதிதாக அமைக்கப்பட்டு பணிகள் முடிந்தன.
இந்தப் பூங்காவை அமைச்சா் சா.மு.நாசா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மேலும், அவா் அங்கு உள்ள உடற்பயிற்சி உபகரணங்களில் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்வின் போது மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், மண்டல குழுத் தலைவா் அமுதா பேபிசேகா், ஆணையா் தா்பகராஜ், பொறியாளா் மனோகரன், உதவி பொறியாளா் சத்தியசீலன், சுகாதார அலுவலா் அப்துல் ஜாபா், மாநகரப் பகுதி திமுக செயலா் பேபி சேகா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.