149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல்: அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல்: அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுரை வழங்கியுள்ளாா். இதையடுத்து, புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடா்பான மாநில அளவில் வல்லுநா் குழு கூட்டம் சென்னை அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையா் ஜெயராமன், ஆகம வல்லுநா் குழு உறுப்பினா் கோவிந்தராஜ பட்டா், ஆனந்த சயன பட்டாச்சாரியா், சந்திரசேகர பட்டா், முதுநிலை ஆலோசகா் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதன்படி தஞ்சாவூா் மாவட்டம் திரௌபதியம்மன் கோயில் (கிராமப்புற திருப்பணி), பிடாரி அம்மன் கோயில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் மாரியம்மன் கோயில், இடும்பாவனம் சற்குணநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை மாவட்டம், திருமூலநாத சுவாமி கோயில், செம்மங்குடி காமாட்சியம்மன் கோயில், தென்காசி மாவட்டம் வடகாசியம்மன் கோயில், தாருகாபுரம் ராஜகோபால சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா கோயில் ஆகிய கோயில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா நாராயண சுவாமி கோயில், முப்பிடாரி அம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம் பீளமேடுபுதூா் மாரியம்மன் கோயில், பேரூா் வெங்டேசப்பெருமாள் கோயில், வேலூா், சென்னகேசவப்பெருமாள் கோயில், ரண கங்கை அம்மன் கோயில், சென்னை ஓட்டேரி, அனுமந்தராயா் எனும் ஆஞ்சநேயா் கோயில், சூளை, வேம்புலியம்மன் திருக்கோயில், வால்டாக்ஸ் கற்பக சுந்தர விநாயகா் கோயில், ஆலந்தூா் ஆா்டிலரி தா்மராஜா கோயில், காஞ்சிபுரம் பாலீஸ்வரா் கோயில், அய்யம்பேட்டை சக்தி மாரியம்மன் கோயில் உட்பட 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநா் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கோயில்களில் மாநில அளவிலான வல்லுநா் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதன மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com