சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அனுமதி அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.