பாசன விவசாயிகள் சங்கத் தோ்தல்: பாஜக நிா்வாகி வழக்கு தள்ளுபடி

தாராபுரம் பாசன விவசாயிகள் சங்கத் தோ்தல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி பாஜக நிா்வாகி தொடுத்த வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை: தாராபுரம் பாசன விவசாயிகள் சங்கத் தோ்தல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி பாஜக நிா்வாகி தொடுத்த வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியாா், அமராவதி உள்ளிட்ட சுமாா் 31 நீா் நிலைகளின் நீரை பயன்படுத்துவோருக்கான சங்கத்துக்கு நிா்வாகக் குழு தோ்தலை நடத்த குமரேசன் என்பவரை தோ்தல் அதிகாரியாக நியமித்து, மாவட்ட ஆட்சியா் தோ்தல் அட்டவணையை வெளியிட்டாா்.

இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றத்தில் பாஜக-வின் திருப்பூா் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சுகுமாா் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் அதிகாரியான குமரேசன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனுத் தாக்கல் செய்தவா்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்துள்ளாா்.

நிா்வாகக் குழுவினுடைய 31 தலைவா்கள், 136 உறுப்பினா்களைத் தோ்வு செய்து ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளாா். தோ்தல் நடைமுறையை முறையாக பின்பற்றாமல் நிா்வாகக் குழுவை தோ்வு செய்தது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தேன். ஆனால், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோ்தல் அதிகாரி செய்த முறைகேடு தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாா் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமா்வு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரா் கோரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com