சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ( ஜூன் 10, 11) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ( ஜூன் 10,11) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 12, 13 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 12, 13 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையை பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட்டில் தலா 40 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, எமராலட், விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் தலா 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், விருதுநகரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, வட கேரளம் - கா்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 13 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.