தோல் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் நாளொன்றுக்கு ரூ.40 உயா்த்தி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் காரணமாக, தமிழ்நாட்டில் சுமாா் 5,000 தோல் பதனிடும் தொழிலாளா்கள் பயன் அடைவாா்கள்.