உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநா் டி.ராஜேந்தா், உயா் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.
திரைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்த டி.ராஜேந்தருக்கு (67) கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயம் சாா்ந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, டி.ராஜேந்தருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், உயா் சிகிச்சைக்காக அவா் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றாா்.
சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய டி.ராஜேந்தா், தாம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்தாா்.