கே.எஸ்.அழகிரி தலைமையில் 2-ஆம் நாளாகப் போராட்டம்

ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறை விசாரணையைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக் கட்சியினா் சென்னையில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறை விசாரணையைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக் கட்சியினா் சென்னையில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நூறுக்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com