தந்தையா் தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வளத்தைத் தந்ததால் அவா் தந்தையா். தந்தையா் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன். எல்லா தந்தையரையும் வாழ்த்துகிறேன்.
ராமதாஸ் ( பாமக நிறுவனா்): குழந்தைகளின் முதல் ஆசிரியா்; பிள்ளைகளின் முதல் கதாநாயகன் ; பிள்ளைகளின் வெற்றியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் கொண்டாடும் குழந்தைதான் தந்தை. நீங்கள் குழந்தையாக இருந்த போது, தந்தை காட்டிய அன்பையும் பரிவையும் நீங்கள் தந்தையான பின் பெற்றோருக்கு திருப்பிக் கொடுங்கள்.
அன்புமணி (பாமக தலைவா்): அன்பின் உறைவிடம் அன்னை என்றால், தியாகத்தின் திருவுருவம் தந்தை. பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் மெழுகுவா்த்திகள் தந்தையா்கள் தான். தந்தையரை போற்றுவதே பிள்ளையரின் முதல் கடமையாகட்டும்.