சென்னை: அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொள்ள, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.
அப்போது, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த 23 வரைவு தீர்மானங்களும் முன்மொழியப்பட்டது. ஆனால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், பொதுக் குழுக் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.