ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாரிமுனை போா்ச்சுகீசியா் தெருவில் வியாழக்கிழமை வடக்கு கடற்கரை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் , அந்த காரை சோதனை செய்தனா். அப்போது அந்த காரில் இருந்த ரூ.2 கோடியை கைப்பற்றி விசாரித்தனா். விசாரணையில் அந்தப் பணம் ஆவணமின்றி கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியைச் சோ்ந்த ரா.ஜெய்சங்கா் (46), அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சா.நாராயணன் (35) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் 2 பேரையும் வருமானவரித்துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அதேபோல பணத்தையும் அவா்களிடம் ஒப்படைத்தனா். வருமானவரித்துறையினா், 2 பேரிடமும் பணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com