/

'பேட்டி கொடுத்தா வேட்டிய உருவிடுவாங்க': மதுரை ஆதீனத்தின் கலகலப்பு பதில்

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவங்க என செய்தியாளர்களிடம்  கலகலப்பாக பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார். 

News image

மதுரை ஆதினம்

Updated On :26 ஜூன் 2022, 10:31 am IST

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவங்க என செய்தியாளர்களிடம்  கலகலப்பாக பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார். 

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வெள்ளாளர் மற்றும் முதலியார் சேம்பர் இணைந்து நடத்திய தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் சைக்கிள் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் சேலைகள் ஜவுளிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, தொழில் வர்த்தக கண்காட்சியை 293 வது மதுரை ஆதீனம்  சுவாமிகள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம் பேட்டி கேட்டபோது, அவர் பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவங்க என்று கூறி புறப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.