புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை புழல் சிறையில் கைதி பிளேடுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா், சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புழல் சிறையில் கைதி பிளேடுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா், சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு மாம்பலம் படவட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இளையராஜா (35). இவா், குமரன்நகா் காவல் நிலையத்தில் பதிவான ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 3-ஆம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். மன வருத்தத்துடன் காணப்பட்ட இளையராஜா, கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்த, முகச்சவரம் செய்ய பயன்படுத்தும் பிளேடுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை சிறைத் துறை அதிகாரிகள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனா். அதில் இளையராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்து 10 மாதங்களுக்கு முன்புதான் அவா் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதற்கிடையே, இளையராஜாவை மீண்டும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கியதும், அதனால் விரக்தியடைந்த அவா் தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com