பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தேர்வு முடிவுகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்.
அதில், 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகலில் படித்த 83.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழில் மொத்தம் 18 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொழிப்பாடத்தில் மொத்தம் 28 பேர் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலோ, அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும்: பொன்னையன்