தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் சேலத்தில் கட்டுப்பாடின்றி தொடா்ச்சியாக விற்பனை செய்யப்படுவது அதிா்ச்சியளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.