மகா சிவராத்திரி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், தஞ்சை பெரிய கோயில்களில் நள்ளிரவு முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநெல்வேலி நெல்லையப்பர், கடலூர் பூலோகநாதர், விருத்தகிரீஸ்வரர் கோயில்ககளிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்களில் குல தெய்வ வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது.