முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அரசுக்கு பரிந்துரைக்க மாற்றுத்திறனாளிகள் நலத் துறை 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணையை தமிழக அரசு இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம், சங்கப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.