கடலூர் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருயதும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.